🎯 நோக்கமும் நிறைவும் :
தமிழ்ச்சோலைகளில் தமிழ் பயின்று வளர்தமிழ்-12 ஐ நிறைவு செய்து செல்லும் மாணவர்களுடனான ஒரு சந்திப்பாகவும், தொடர்ந்து தமிழ்மொழிசார் இயங்கு நிலையைப் பேணும் நோக்கோடும், மாணவர்களை தேர்வுகளுக்கு அணியஞ்செய்யும் வகையிலும் ஆண்டுதோறும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் செயலமர்வு நடத்தப்படுகிறது.
அமைப்பு முறை :
வளர்தமிழ்-12 பாடப்பரப்புச் சார்ந்து எமது மொழி, பண்பாடு, வாழ்வியல், வளம், வரலாறு தொடர்பான கருத்தரங்காகவும் மாணவர் எண்ணச் சிதறல்களுக்கு வழிசமைக்கும் நிகழ்வாகவும் இச்செயலமர்வு அமைக்கப்பட்டிருக்கும்.
அடைவு மட்டம் :
மொழிசார் எண்ணக்கருவுடன் கணிசமான இளையோர் இசைந்தும் இணைந்தும் பயணிக்க இச்செயலமர்வு வழிசமைத்து வருகின்றது.
