இந்த இணையத்தளம் புத்துருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனால், இதில் பல பகுதிகள் முழுமையற்றனவாய் உள்ளன. புத்துருவாக்கப் பணிகள் விரைவில் நிறைவடையும்.

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் - பிரான்சு

ASSOCIATION TAMOULCHOLAI - FRANCE

பிரான்சில் வளரும் எம் இளந்தலைமுறையினரைத் தமிழோடும் தமிழ்க் கலைகளோடும் தமிழ்ப்பண்பாட்டோடும் இணைக்கும் கல்விசார் அமைப்பு

எதிர்வரும் நிகழ்வுகள்
Section Header

திருக்குறள் திறன் போட்டி: நோக்கமும் நிறைவும்

தமிழரின் உலகாந்த அறிவியல் பார்வைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் பல்நூறு நூல்களில் முதன்மையானது திருக்குறள். மாந்த வாழ்வியலின் ஒவ்வோரு கூறுகளையும் கட்டமைத்துக்கொள்ள வழிசொல்லும் உன்னத இலக்கியம்.

🌏 உலகப் பொதுமறை

இனம், மொழி, மதம், நாடு என எக்கட்டுக்குள்ளும் அடங்கிடாத உலகப் பொதுமறையாய் பலநூறு ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கும் வியத்தகு புதையலே எம் திருக்குறள்.


🎯 போட்டியின் முதன்மை நோக்கங்கள்

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினால் உருவாக்கப்பட்ட இப்போட்டியின் அடிப்படை நோக்கங்கள் பின்வருமாறு:

  • அறமும் அறிவியலும்: புலம்பெயர் மாணவரிடத்தே தமிழரின் அறத்தையும் அறிவியலையும் கொண்டு செல்லுதல்.

  • இலக்கியச் செறிவு: தமிழ் இலக்கியத்தின் ஆழத்தையும், அரசியல் தெளிவையும் இளைய தலைமுறைக்கு உணரவைத்தல்.

  • பரிணாம வளர்ச்சி: வெறும் மனனத்துடன் (Memory) சுருக்கிவிடாது, குறள் சார்ந்த அறிவுத்திறனை ஊட்டுதல்.


🏆 போட்டி அமைப்பு முறை

இப்போட்டியானது ஒன்பது அகவைப் பிரிவுகளுடன், மூன்று முக்கிய கட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது:

  1. தமிழ்ச்சோலை மட்டம்

  2. திணைக்கள மட்டம்

  3. இறுதிப் போட்டி

குறிக்கோள்: போட்டியாளர்களின் மொழித்திறனையும் அறிவியல் தெளிவையும் பெருக்குவதே இதன் இறுதி இலக்காகும்.


✅ நிறைவுரை: ஒரு உந்துகருவி

இது ஒரு போட்டியாக மட்டுமே நின்றுவிடாது, புலம்பெயர் தமிழ் இளையோருக்கு எம் மொழி மற்றும் இலக்கிய அறிவியல் மீதான நேர்மறையான கண்ணோட்டத்தை உருவாக்குகிறது. எம்மினத்தின் விடுதலை நோக்கி அவர்களை நகர்த்தும் ஒர் உந்துகருவியே இத் திருக்குறள் திறன் போட்டியாகும்.